சிறிலங்காவில் திரையரங்குகளை மீண்டும் திறக்க நடவடிக்கை!

252 0

சிறிலங்காவில் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து திரையரங்குகளும்   திறக்கப்படவுள்ளதாக  கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அறிறுத்தல்களைப்பின்பற்றி திரையரங்குகளை திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கலாசார அலுவல்கள்  அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஷ்சந்திர தெரிவித்துள்ளார்.

திரையரங்குகளை திறப்பதற்கு முன்பாக   கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை திரையரங்குகளுக்கு வருகைதருவோர் பின்பற்றவேண்டிய   நடைமுறைகள் தொடர்பில்  ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள திரையரங்குகள் கடந்த  மார்ச் மாதம் 14 ஆம் திகதி முடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.