இந்திய வீரர்கள் வீரமரணம்- அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி இரங்கல்

247 0

சீனாவுடனான மோதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீர‌ர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி மைக் பாம்பியோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கட்கிழமை இரவு இந்தியா-சீன படைகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. பதற்றத்தை தணிக்க இரு தரப்பு அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சீனாவுடனான சண்டையில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘அண்மையில் சீனாவுடனான மோதலின் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்காக இந்திய மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், வீரர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களை என்றும் நினைவில் கொள்வோம்’ என குறிப்பிட்டுள்ளார்.