ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பலர் அரசாங்கத்துடன் இணைவர் – அமைச்சர் கிரியெல்ல

430 0

lakshmanஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மத்திய அதிவேக பாதையின் முதற்கட்ட பணிகளை பார்வையிடுவதற்காக பஷ்யால பகுதிக்கு சென்ற போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
ஒன்றிணைந்த எதிர்கட்சியினருக்கு எங்களது செயற்பாடுகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைவோம் என ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் நினைத்து கூட பார்த்திருக்கமாட்டார்கள் என்றும் அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல சுட்டிக்காட்டினார்.
பிரதேச சபை தேர்தல்கள் அடுத்த வருடம் முதல் காலாண்டு பகுதிகளில் நிச்சயமாக நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதற்கு ஐக்கிய தேசிய கட்சி தயாராகவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment