வவுனியாவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு(காணொளி)

354 0

waterவவுனியா பொலிஸில் 24ஆவது சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் சுகாதார அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.இலங்கை பொலிஸின் 150 ஆவது ஆண்டை முன்னிட்டு வவுனியா பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுத்திகரிக்கும் குடிநீர் திட்டத்தினை வவுனியா பொலிஸ் நிலையத்தில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின இன்று திறந்து வைத்தார்.

இன்று காலை 10.30 மணிக்கு வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்நிகழ்வில் மத அனுஸ்டானங்களை அடுத்து இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தின் 24ஆவது நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன கெட்டியாராச்சி, இலங்கை கடற்படை தளபதி, வவுனியா மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.