முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச்சிலை யாழில் திறப்பு(காணொளி)

352 0

cமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு உருவச்சிலை திறப்பும் நினைவுக் கூட்டமும் தென்மராட்சி சாவகச்சேரியில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனால் நாடாஜா ரவிராஜின் உருவச்சலை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

சிலை திறப்பு நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், அமைச்சர ராஜித சேனாரட்ன, அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கலாநிதி விக்கிரமபாகு கருனாரட்ண, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.எ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.