பொசோன் பௌர்ணமி தினம் இன்றாகும்

260 0

இலங்கைவாழ் பௌத்த மக்கள் இன்று (05) பொசோன் பௌர்ணமி தினத்தை கொண்டாடுகின்றனர்.

பௌத்த மதம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட தினமான இத்தினத்திலேயே,  மஹிந்த தேரர் இலங்கை  காலடி வைத்து பௌத்தமத சிந்தனையை அறிமுகப்படுத்தினார் என்பதால், இன்றை தினத்தை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமாக பௌத்தர்கள் கொண்டாடுகின்றனர்.

இதேவேளை, கொவிட் 19 பரவல் காரணமாக, இலங்கைவாழ் பௌத்தர்கள் மத வழிபாட்டு இடங்களில் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு, சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

சமூக இடைவெளியை பின்பற்றி, தமது வீடுகளில் இருந்தவாறு இம்முறை பொசோன் பௌர்ணமி தின வழிபாடுகளில் ஈடுபடுமாறு கோரப்பட்டுள்ளது.