சிவனொளி பாத மலைக்குச் செல்பவர்களுக்கு பியர் விற்பனை செய்தவர் கைது

315 0

evening-tamil-news-paper_7254755497சிவனொளி பாத மலையாத்திரைக்கு செல்லும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மதுசாரம் விற்பனை செய்துவந்த ஒருவர் நல்லத்தண்ணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

சிவனொளி பாதையின் இதிகடுபான பிரதேசத்தில் வைத்து நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகத்திற்குரியவர் கைது செய்யப்படும் வேளை, அவரிடம் இருந்து 25 தகர பேணியில் அடைக்கப்பட்ட பியர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகத்திற்குரியவர், ஹட்டன் பதில் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.