மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்தார் ஞானசார தேரர்

248 0

39231பொதுபல சேனாவின் தலைவர் கலபொடஅத்தே ஞானசார தேரர், மத்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்துள்ளார்.

நேற்றிரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பௌத்த மதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட 22 சம்பவங்கள் குறித்த பட்டியல் ஒன்றினை கலபொடஅத்தே ஞானசார தேரர், பீடாதிபதிகளிடம் கையளித்தார்.

இதுதவிர, சம்பதப்பட்ட பௌத்த அமைப்புக்களுடன் பேச்சு வர்த்தை மேற்கொண்டு, அதில் எட்டப்படும் தீர்மானங்கள் குறித்த பரிந்துரைகளை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு சமர்ப்பிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.