விபத்தில் பெண் பலி

272 0

201610112134096220_3-killed-in-accident-near-coimbatore_secvpfமிஹிந்தலை – மருதன்குளம் பிரதேத்தில் பாரவூர்தி ஒன்றும் சிற்றூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பெண்ணெருவர் பலியானார்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூன்று பேர் மிஹிந்தலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் பலியானவர் தம்புள்ளை – இனாமலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதானவர் எனவும் அவர் தமது புதல்விக்கு மருந்து எடுப்பதற்காக சென்ற நிலையிலேயே, அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில், பலியானபெண்ணின் 5 வயது புதல்வியும் உள்ளடங்குவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கண்டி நுவரெலியா பிரதான வீதியின் புஸ்ஸல்லாவ கல்பாலம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

தேயிலை கொழுந்தினை ஏற்றிய பாரவூர்தி ஒன்றும் சிற்றூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதி இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சிற்றூர்தி வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில், இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.