யாழ் நூலக எரிப்பு நினைவேந்தல் முன்னணியால் அனுஷ்டிப்பு!

253 0

யாழ்ப்பாணம் பொது நூலகம் இனவாத தீயில் எரித்து நாசமாக்கப்பட்ட 39ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (01) மாலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன், சட்டத்தரணி க.சுகாஸ், கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் கிருபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.