யாழ்.நூலகம் எரிக்கப்பட்ட 39 ஆவது ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிப்பு

225 0

20 ஆம் நூற்றாண்டின் ‘தமிழ் கலாச்சார இனப்படுகொலை’ என்று கூறப்படும் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 39 ஆவது ஆண்டு நினைவுதினம், யாழ்.நூலகத்தில் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டபோது படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு, யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஏற்பாட்டில் பதில் முதல்வர் தலைமையில் நூலக வளாகத்தில் இன்று காலை அஞ்சலி செய்யப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளர், செயலாளர் ஊழியர்கள் ஆகியயோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் நூலகம் எரிக்கப்பட்ட நினைவு நாள் நிகழ்வு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலும் நூலக நுழைவாயிலில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த அஞ்சலி நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.