சொய்சாபுர விவகாரம்; சந்தேக நபரை 7 நாள்கள் தடுத்து வைக்க அனுமதி

244 0

இரத்மலானை சொய்சாபுர பகுதியில் ஹோட்டல் ஒன்றின்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை 7 நாள்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த சந்தேக நபர் கல்கிஸை நீதவான் நீதிமன்றில் நேற்று(31) பிற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிகிழமை அதிகாலை குறித்த ஹோட்டல் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சந்தேக நபர், பாணந்துறை பகுதியில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டிருந்தார்.