தாக்கியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன் – வியாளேந்திரன்

256 0

மட்டக்களப்பு – வாகனேரி குளத்துமடு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல் நடாத்தியவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி நடவடிக்கை மேற்கொள்வேன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.

தாக்குல் சம்பவம் நடந்த மற்றும் மண் அகழ்வு நடக்கும் பகுதிக்கு வியாளேந்திரன் விஜயம் மேற்கொண்டதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார் மற்றும் பொது மக்களுடன் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.