குரும்பசிட்டிப் பகுதி கிணறு ஒன்றிலிருந்து பெருமளவு வெடி பொருட்கள் மீட்பு

249 0

யாழ்ப்பாணத்தில் வலி வடக்கு குரும்பசிட்டிப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து பெருமளவு வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தக் கிணற்றைச் சுத்தம் செய்யும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அதற்குள் பெருமளவு வெடிபொருள்கள் இருப்பது அவதானிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விசேட அதிரடிப்படையினருடன் வந்த பொலிஸார் அங்கிருந்த வெடிபொருள்களை மீட்டுள்ளனர்.