யாழ் ஊர்காவற்றுறையில் வெளிநோயாளர் பிரிவு திறப்பு(காணொளி)

305 0

new-pictureயாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு திறப்பு விழா இன்று நடைபெற்றது.ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியக் கலாநிதி வை.யதுநந்தனன் தலைமையில் நடைபெற்ற வைத்தியசாலை திறப்பு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக எம்.ஜே.எவ் அறக்கட்டளை நிறுவன பணிப்பாளர் மெறில் ஜே.பெர்னான்டோ கலந்து கொண்டார்.

எம்.ஜே.எவ் அறக்கட்டளை நிறுவனத்தினால் 65 மில்லியன் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு இன்று எம்.ஜே.எவ் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் ஜே.பெர்னான்டோவினால் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஏ.கேதீஸ்வரனிடம் வைத்தியசாலையின் திறப்பு வழங்கப்பட்டு கையளிக்கப்பட்டது.

விருந்தினர்கள் பான்ட் வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டு பிரதம விருந்தினரால் பெயர்ப்பலகை திறந்துவைக்கப்பட்டு வைபவ ரீதியாக ஆதார வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு நாடாவெட்டித் திறந்து வைக்கப்பட்டது.

மங்கல விளக்கேற்றல், வரவேற்பு நடனம், வரவேற்புரை, தலைமையுரையைத் தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன.நிகழ்வில் எம்.ஜே.எவ். அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் மெறில்.ஜே.பெர்னான்டோ, சிறப்பு விருந்தினர் ரவி தம்பையா, கௌரவ விருந்தினரான சுகாதார சுதேச மருத்துவத்துறை அமைச்சின் செயலாளர் கிருவாகரன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி

ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் க.நந்தகுமாரன் மற்றும் ஊர்காவற்துறை பிரதேச செயலர் திருமதி ஏ.அன்ரன் யோகநாயகம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.