சென்னையில் கொரோனாவுக்கு பெண் தலைமை செவிலியர் உயிரிழப்பு

244 0

சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளார்.சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த 58 வயதான பெண் தலைமை செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா. இவர் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் செவிலியர்களுக்கான பணிநேரம் ஒதுக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கவனித்து வந்தார்.

தலைமை செவிலியர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 26-ந்தேதி முதல் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து அவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொரோனா உறுதி செய்யப்பட்டு உயிரிழந்த முதல், தலைமை பெண் செவிலியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.