இன்றுமட்டும் 96 புதிய தொற்றாளர்கள் இனங் காணப்பட்டனர்

333 0

இலங்கையில் இன்றுமட்டும் 96 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை வரலாற்றில் ஒரே நாளில் அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியமை இன்றேயாகும்.

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,278ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 712 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 556 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று இனங்காணப்பட்ட 96 கொ​ரோனா வைரஸ் தொற்றாளர்களில் 88பேர் குவைட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்; 8பேர் கடற்படை வீரர்கள் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.