சென்னை வந்த ப.சிதம்பரம் கையில் முத்திரை குத்தப்பட்டது

286 0

டெல்லியில் இருந்து சென்னை வந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் கையில் முத்திரை குத்தப்பட்டது.

விமானத்தில் வரும் பயணிகளுக்கு கொரோனா அறிகுறி தென்படாவிட்டாலும், அவர்கள் வீட்டில் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், பயணிகள் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்வதற்கு முன்பு அவர்களுடைய இடது கையில் தனிமைப்படுத்தப்பட்ட முத்திரை அழியாத மையால் குத்தப்படும் என்றும் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து உள்ளது.

அதன்படி நேற்று சென்னை வந்த பயணிகள் அனைவருக்கும் விமான நிலையத்தில் வழக்கமான பரிசோதனைக்கு பின்னர் கையில் முத்திரை குத்தப்பட்டது. டெல்லியில் இருந்து மதியம் 1 மணிக்கு சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் வந்தார். அவரது கையிலும் முத்திரை குத்தப்பட்டது.