சாரதி அனுமதிப் பத்திரத்தை தவற விட்ட பொலிஸார்

302 0

pol-sri_lanka

யாழ்ப்பாணம் நகரப் போக்குவரத்துப் பொலிஸார் பிரிவில் வீதி ஒழுங்கை கடைப்பிடிக்காத பெண் ஒருவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட வாகன சாரதி அனுமதிப் பத்திரம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் காணாமல் போயுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

தெல்லிப்பளை மடத்தடியைச் சேர்ந்த நவனிதா கிருபாகரன் என்பவரின் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அலுவலகத்தில் காணாமல் போயுள்ளது.

கடந்த 4ஆம் திகதி தெல்லிப்பளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித் போது குறித்த பெண் ஆனைக்கோட்டைப் பகுதியில் தவறான முறையில் வாகனம் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது பொலிஸாரினால் குற்றப்பத்திரம் வழங்கப்பட்டு வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

நவனிதா கிருபாகரனின் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் ஒப்படையக்கப்பட்டு பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது.

இன்றையதினம் உரிமையாளர் குற்றப்பணத்தை செலுத்திய பின் வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை மீளப்பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு அலுவலகத்திற்கு வந்த போது அனுமதிப்பத்திரம் காணாமல் போயுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய யாழ்ப்பாண பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பிரிவு பொறுப்பதிகாரி வஜிர குறித்த நபருடைய வாகன அனுமதிப்பத்திரத்தை அடுத்து வரும் ஒரு வாரத்திற்குள் மீள புதிதாக பெற்றுக்கொடுப்பதற்குரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் என உத்தியோகத்தர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.