உயிரிழந்த முன்னாள் போராளி குடும்பத்தினiர் காதர் மஸ்தான் சந்தித்தார்

280 0

masthan

மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படும் முன்னாள் போராளியான தே.கமலதாசின் குடும்பத்தினரை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார்.

இதன்படி, உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கான வாழ்வாதார உதவிகள் தொடர்பில் தான் பிரதேச செயலாளருடன் கலந்துரையாடல்களை நடாத்துவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த நபருக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டிருக்கலாம் என குடும்பத்தார் சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில், இந்த விடயம் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் குடும்பத்தாரிடம் கேட்டறிந்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குறித்த குடும்பத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளை வழங்குகின்றமை குறித்து உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடாத்தவுள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு பாராளுமன்ற உறுப்பினர் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியொன்றையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.