மஹிந்தவின் பிறந்தநாளில் புதிய கட்சி வெளிவரும்

304 0

22-mahinda-rajapakse-afpஸ்ரீலங்கா மக்கள் முன்னணி (பொதுஜன பெரமுன)யின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தனது கன்னி உரையினை இன்று நிகழ்த்தினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஜீ.எல்.பீரிஸ் தமது முதல் உரையினை நிகழ்த்தினார்.

தொடர்ந்து தனது உரையில்,FCID மூலம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை பிளவடைய செய்வதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருகின்றார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிறந்த நாள் கொண்டாட்டம் நாளை இடம்பெறஉள்ளது.

எனவே நாளை கட்சி தொடர்பில் புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளோம் எனவும் கூறினார்.

மேலும் அவருடைய தலைமைத்துவத்தின் கீழ் கட்சியினை சிறப்பாக கொண்டு செல்வதற்கு முயற்சி செய்துள்ளோம். எனவும் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.