தஞ்சையில் வாகன சோதனையில் ரூ. 2½ லட்சம் பறிமுதல்

320 0

201611161122247951_thanjavur-at-the-vehicle-inspection-rs-2-lakhs-seized_secvpfதஞ்சையில் அனுமதியின்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 2½ லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தஞ்சை தொகுதி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்று காலை தஞ்சை -பட்டுக்கோட்டை புறவழிச் சாலையில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி கிருஷ்ண மூர்த்தி தலைமையில் துணை ராணுவம் உதவியுடன் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது.காரில் வந்த இர்ஷாத் அகமது என்பவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் பணத்தை திருச்சியில் இருந்து நாகைக்கு தியேட்டர் கட்டுமான பணிக்கு கொண்டு செல்வதாக கூறினார்.

ஆனால் ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனை தொடர்ந்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் தஞ்சை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலகத்தில் ஒப்படைக்கப்படுகிறது.