சிறிலங்காவில் நாளாந்தம் 6000 பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானம்!

296 0

சிறிலங்காவில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர் பரிசோதனைகளை 6000 வரையில் அதிகரிப்பதற்கு தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அரச மற்றும் தனியார் துறையில் உள்ள 15 ஆய்வகங்களின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு ஆடைக்கு பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தொழிலாளர்களுக்கு தேவையான பொருட்களை உடனடியாக வழங்குமாறு சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.