சிறிலங்காவில் மரக்கறியுடன் போதை பொருள் கடத்தல்

307 0

கொழும்பு மற்றும் தம்புள்ள ஆகிய நகரங்களுக்கு காய்கறிகளுடன் போதைப் பொருட்களைக் கடத்திச்சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மரக்கறி விற்பனைக்காக காவல் துறை  அனுமதிப் பத்திரங்களை பெற்ற வாகனத்தின் சாரதி காய்கறிகளுடன் சுமார் 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெராயின் போதைப் பொருட்களை கொண்டுசென்றமை, விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினரும் முந்தல் காவல் துறையும் இணைந்து நேற்று (01) சோதனையிட்டபோது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்போது வாகனத்தின் சாரதியின் இருக்கைக்கையின் கீழ் ஒரு சிறிய பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 47 கிராம் ஐஸ் போதைப் பொருளும் மற்றும் 12 கிராம் ஹெரோயினும் காவல் துறையால் மீட்கப்பட்டுள்ளது.