பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே மோதல்!

289 0

peraபேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு (15) இடம்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக பாதுகாப்புத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.இறுதியாண்டு மாணவர்களுக்கான பிரியாவிடை வைபவத்தை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் உரிய முறையில் ஏற்பாடு செய்யவில்லை என்று குற்றம் சாட்டியே இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மீது இறுதி ஆண்டு மாணவர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நான்கு மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.