மட்டக்களப்பு இரட்டைக்கொலை-சந்தேகநபர்களக்கு விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

352 0

two-murderமட்டக்களப்பு ஏறாவூர் இரட்டைக்கொலை தொடர்பான சந்தேக நபர்கள் ஆறுபேரின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் ஆறுபேரும் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்செய்யப்பட்டதையடுத்து அவர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ரீ.தியாகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

ஏறாவூர் முகாந்திரம் வீதி முதலாம் ஒழுங்கையிலுள்ள வீட்டில் படுத்துறங்கிய 56 வயதான என்.எம்.சித்தி உசைரா மற்றும் அவரது திருமணமான மகளான 32 வயதுடைய ஜெனீரா பாணு மாஹிர் ஆகியோர் கடந்த செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி அதிகாலை பொல்லால் அடித்து கொடூரமாகக்கொலை செய்யப்பட்டிருந்தனர்.

24 வயதுடைய முஹம்மது பாஹிர், வசம்பு என்றழைக்கப்படும் 28 வயதுடைய உசனார் முஹம்மது தில்ஷான், 23 வயதுடைய கலீலுர் ரகுமான் முஹம்மது றாசிம், 23 வயதுடைய புஹாரி முஹம்மது அஸ்ஹர், 30 வயதுடைய இஸ்மாயில் சப்ரின் மற்றும் 50 வயதுடைய அபூபக்கர் முகம்மது பிலால் ஆகியோரே   விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டபோது நீதிமன்ற வளாகத்தில்  பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை சந்தேக நபர்களது இரத்த மாதிரி மற்றும் தடயப்பொருட்களும் பகுப்பாய்விற்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதுதொடர்பான அறிக்கை இன்னும் கிடைக்கவில்லையென பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.