யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு கடத்தப்பட்ட 70 கிலோ கஞ்சா வவுனியாவில் மீட்பு(காணொளி)

307 0

vavuniyaவவுனியாவில் வானொன்றில் கடத்தி வரப்பட்ட 70 கிலோ கஞ்சா வவுனியா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வவுனியாவிற்கு வானொன்றில் கடத்தி வரப்பட்ட 70 கிலோ கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் 8 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏ-9 வீதியில் அமைந்துள்ள நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேகத்திற்கிடமான வானை சோதனை செய்யும்போது பெருந்தொகையான கஞ்சா கைப்பற்றப்பட்டது.

குறித்த வானை சோதனைக்குட்படுத்திய பின்னர் வாகனத்தை செல்வதற்காக அனுமதியளித்தபோதிலும் அதிலிருந்தவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட பொலிஸார் மீண்டும் வாகனத்தை முழுமையாக சோதனை செய்தனர்.

இதன்போது வானின் இருக்கைகளுக்கு கீழ் நுட்பமான முறையில் 70 கிலோ கஞ்சா பொதிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.

குறிப்பிட்ட வாகனம் யாழ்ப்பாணம் மாதகலிலிருந்து கொழும்பு கொச்சிக்கடை நோக்கி பயணித்ததாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.