மட்டக்களப்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் த.தே.கூட்டமைப்பிற்கும், ஆர்ப்பாட்டக்காரருக்கும் இடையில் வாக்குவாதம்(காணொளி)

336 0

monk-with-tamil-gs-problemமட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியினால் அரச அதிகாரிகள் கடுமையான முறையில் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்து, மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை நடாத்தப்பட்டது.

இதன்போது வீதியில் டயர்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரிக்கமுற்பட்டவேளை, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் அவற்றினை தடுத்ததன் காரணமாக அங்கு பதற்ற நிலையேற்பட்டதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும், ஆர்ப்பட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் இடம்பெற்றது.

கடந்த காலத்தில் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குள் அத்துமீறி சென்ற குறித்த பௌத்த பிக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியாவை தாக்க முற்பட்டதுடன், பிரதேச செயலகத்தினையும் சேதப்படுத்தியிருந்தார்.

இதற்கு எதிராக இன்றுவரை உரிய நடவடிக்கையெடுக்கப்படாத நிலையில், குறித்த பிரதேச செயலாளரையே இடமாற்றும் நடவடிக்கையெடுக்கப்பட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.