உரிமைகளை நெஞ்சை நிமிர்த்தி தட்டிக் கேட்பதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது

286 0

738618034untitled-5தமக்கேயுரித்தான உரிமைகளை நெஞ்சை நிமிர்த்தி தட்டிக் கேட்பதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது எனவும் அநீதிகள் இழைக்கப்படும் போது அதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கான இயலுமை அனைவரிடமும் இருக்க வேண்டும் எனவும், கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

மட்டக்களப்பு காத்தான்குடியில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

மருந்துக் கலவையாளர்கள் நியமன விடயத்தில் சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாணத்துக்கு அநீதி இழைக்கப்பட்ட போது, அதனைத் தட்டிக் கேட்டதன் மூலமே அது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு அவர்கள் முன்வந்துள்ளார்கள்.

மருந்துக் கலவையாளர்கள் நியமனத்தின் போது நாடளாவிய ரீதியில் 380 நியமிக்கப்பட்ட போதும் கிழக்கு மாகாணத்துக்கு 2 பேர் மாத்திரமே நியமிக்கப்பட்டனர்.

2013ம் ஆண்டு சுற்றறிக்கையின் பிரகாரம், கிழக்கு மாகாணத்தில் 56 மருந்துக் கலவையாளர்களுக்கான வெற்றிடம் இருக்கையில் எவ்வாறு இருவரை மாத்திரம் எமக்கு வழங்க முடியும் எனவும், இவர்கள் எவ்வாறு இதனை பகிர்ந்தளித்துள்ளார்கள் எனவும் நான் கேள்வியெழுப்பியிருந்தேன்.

எமது மாகாணமும் ஏனைய மாகாணங்களை போன்று சமமான உரிமையுள்ள சமமாக அபிவிருத்திகளை அனுபவிக்க உரித்துடையவர்கள் ஆகவே நாம் எதற்கும் யாரிடமும் மண்டியிட வேண்டிய தேவையில்லை என்பதை நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.