அரச சேவை முகாமைத்துவ ரீதியாக பலவீனமடைந்துள்ளது!

301 0

691363387rajithaநாட்டின் அரச சேவையானது முகாமைத்துவ ரீதியாக மிகவும் பலவீனமடைந்துள்ளது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்கள் சுமார் ஒரு மாதங்களில் எடுக்கும் தீர்மானங்களை தனியார் நிறுவனங்கள் ஒரே நாளில் எடுக்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார ஊழியர்களின் மனித வளத்தை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

காலம் கடந்து போன அரச சேவை சட்ட திட்டங்களில் சிக்கியிருக்கும் ஊழியர்களை அதில் இருந்து அகற்றி வலுவான அரச சேவையை உருவாக்க தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் ராஜித்த இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.