மேல் மாகாணத்தில் நிர்க்கதிக்குள்ளானோருக்கு நிவாரணம்!

331 0

சொந்த இடங்களுக்கு செல்லமுடியாமல், மேல் மாகாணத்தில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண ஆளுநரினால் குறித்த நிவாரண சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நிவாரண உதவிகள் கிடைக்கப்பெறாத மற்றும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள தரப்பினர் மேல் மகாண ஆளுநரின் நிவாரண சேவை மத்திய நிலையத்தின் 011- 2092720 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.