வவுனியாவில் தீப்பற்றிய முச்சக்கரவண்டி(காணொளி)

495 0

vavuniyaவவுனியா குளுமாட்டுச்சந்தியில் முச்சக்கரவண்டி ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

வவுனியா குளுமாட்டுசந்தியில் இன்று காலை 8 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்று தீடிரென தீப்பற்றி எரிந்தது.

வவுனியா நெளுக்குளத்திலிருந்து வவுனியா நகரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி எரிபொருள் ஒழுக்கு காரணமாக குளுமாட்டுச்சந்தியில் இவ்வாறு தீப்பற்றிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பற்றியதை அறியாத முச்சக்கரவண்டியின் ஓட்டுநர் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், மக்கள் முச்சக்கரவண்டி தீப்பற்றியுள்ளது என கூச்சலிட்டு முச்சக்கரவண்டியினை நிறுத்தினர். உடனே பொதுமக்கள் உதவியிடன் அருகே காணப்பட்ட குளத்தில் முச்சக்கரவண்டியினை தள்ளி தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.