இரு தண்டவாளத்தில் ஓடும் ரயில் போல் நகர்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பயணம்!

320 0

10482288_821192247892435_5207023812320772590_nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்க அரசியல் மற்றும் பிணக்க அரசியல் என்ற இரண்டு தண்டவாளத்தில் தமிழ் தேசிய அரசியலை முன்னகர்த்திச் செல்வதாக அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான பஸீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார், மேலும் அவர் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணசபையில் அவர்களின் உரிமைக்காக எதிர்ப்பு அரசியலும், அதாவது, அகிம்சைப் போராட்டத்தினூடாக தமிழ்த் தேசியத்தின் அடையாளத்தை அடையும் முயற்சியும், மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இணக்க அரசியலும் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும், இது ஒரு ஆரோக்கியமான செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முப்பது ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தின் ஊடாக பயணித்த தமிழர் தரப்பு, தமிழ்த் தேசிய சிந்தனையை வென்றெடுக்கும் குறிக்கோளுடன் இன்றைய அரசுடன் இணைந்து பயணித்து தமது இலக்கை வெல்வது எந்தளவு சாத்தியம் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.