அரநாயக்க பகுதியில் கொரோனா பரவும் அபாயம்

236 0
கேகாலை அரநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம் பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் கொவிட் 19 வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படாது என பொலிஸார் நேற்றிரவு (05) மக்களுக்கு ஒலிப்பெருக்கியின் மூலம் அறிவித்தனர்.

குறித்த பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் திடிரென உயிரிழந்தார்.

இவர் தொடர்பான மருத்துவ அறிக்கை இன்று (06) பிற்பகல் வெளியான நிலையில் உயிரிழந்த குறித்த இளைஞன் கொவிட் 19 தொற்றுக்கு இலக்காகவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.

இதேவேளை, கண்டி மாவட்டத்தின் அக்குரணை பகுதியில் ஏழு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதி தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளது.