கனடாவில் ஈழத்தமிழன் கொலை!

380 0

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஸ்கார்பாரோவில் நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். Scarboroughவில் நந்தா உணவகத்திற்கு முன்பாக (Finch & Bridletowne) மாலை ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மரணமடைந்தவர் தமிழர் என நண்பர்கள் மூலம் உறுதியாகின்றது.

இந்தச் சம்பவத்தில் பலியானவர் இலங்கையின் யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட கமலக்கண்ணன் என நண்பர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த மரணத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். இவரும் இலங்கையைச் சேர்ந்தவர் எனத் தெரியவருகின்றது.

25 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர் என நம்பப்படும் சந்தேக நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேக நபருக்கும் இடையிலான உறவு குறித்து எந்த தகவலும் இல்லை என்று காவலர் ரிங்காஃப் கூறினார்.