லண்டனில் ரைக்ஸி ஓடிய யாழ்.நபர் பலி! நண்பனின் உருக்கமான பதிவு!

307 0

உலக நாடுகளில் பல்லாயிரம் மனித உயிர்களைப் பலியெடுத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் புலம்பெயர் தேச எம் உறவுகளையும் விட்டு வைக்கவில்லை.

உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகள் இக் கொடிய கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந் நிலையில் பிரித்தானியாவில் மினிக் கப் (ரைக்ஸி) சாரதியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மெய்யழகன் என்பவர் இக் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

இந் நிலையில் அவரது நண்பரான வல்வை சுமித்குமார், லண்டன் வாழ் மக்களுக்கும், அங்கு மினி கப் (ரைக்ஸி) ஓடுபவர்களுக்கும் உருக்கமான கோரிக்கை ஒன்றைத் தனது முகநூல் ஊடாக விடுத்துள்ளார்.

அவரின் அந்த உருக்கமான கோரிக்கை தொடர்பான காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.