’இலங்கை முடக்கப்படும் செய்திகளில் உண்மையில்லை

237 0

இந்த மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை முழு இலங்கையும் முடக்கப்படும் என வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செய்திகளை வெளியிடும், பகிரும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.