கடந்த நாட்களில் கிட்டத்தட்ட 1400 கைதிகள் பிணையில் விடுதலை

218 0

கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க கடந்த பல நாட்களில் கிட்டத்தட்ட 1400 கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுக்கப்பட்டவர்களில் சிறு குற்றங்களைச் செய்த அல்லது பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாத கைதிகளே உள்ளனர் என சிறைச்சாலை ஆணையாளர் விஜயநாத் தென்னகோன் கூறியுள்ளார்.

இதேவேளை இன்றும் நாடு முழுவதிலும் உள்ள பல கைதிகள் பிணையில் விடுவிக்கப்படுவார்கள் என சிறைச்சாலை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முகமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.