மன்னாரில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது!

215 0

மன்னார் மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 105 பேர் இது வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இது வரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 11 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொரொனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியவசிய தேவைகளின்றி வெளியில் சுற்றித்திவோரை பொலிஸார் கைதுசெய்து வருகின்றனர்.

அந்தவகையில்,  நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 12 ஆயிரத்து 223 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 3 ஆயிரத்து 17 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.