’நிபுணர்களுடன் கலந்துரையாடுக’-அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

248 0

COVID-19 தொற்றுக்குள்ளான சடலங்களை அகற்றும் முறை தொடர்பில், பொதுச் சுகாதாரம், தொற்றுநோயியல், மருத்துவம் தொடர்பான சட்டம், சட்ட, மண் பகுப்பாய்வு போன்ற சம்பந்தப்பட்ட நிபுணர்களை உள்ளடக்கிய அணியொன்றுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்கவுக்கு இன்று வரையப்பட்ட கடிதத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளரான வைத்தியர் ஹரித அலுத்கேயால் வரையப்பட்ட இக்கடிதத்தின் பிரதிகள், சுகாதாரமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர்களுக்கும் பிரதியிடப்பட்டுள்ளன.