யாழில் நால்வருக்கு கொரோனா தொற்று!!

363 0

 

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் கொரோனாத் தொற்றுக்குள்ளான இரண்டாவது நபர் இனங்காணப்பட்டிருந்த நிலையில், இன்று இரவு 11 மணியளவில் மேலும் இருவர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளனர்.முன்னதாக யாழ்ப்பாணம் தாவடியைச் சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாத்தொற்றுக்குள்ளாகிய நிலையில் கொழும்பு தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இன்று பிற்பகல் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த போதகர் ஒருவர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று இரவு 11 மணியளவில் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் தங்கியிருந்த மேலும் இருவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனையடுத்து யாழ்ப்பாணத்தில் மாத்திரம் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்வடைந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.