கிளிநொச்சியில் கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது(காணொளி)

317 0

kilinochchiகிளிநொச்சியில் வைத்து 02 கிலோ 50 கிராம் கஞ்சாவை கிளிநொச்சி விசேட குற்றத்தடுப்பு பொலிசார் மீட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பானத்திலிருந்து அநுராதபுரம் நோக்கிப்பயணித்த பேருந்திலிருந்து கிளிநொச்சியில் வைத்து இன்று 02 கிலோ 50 கிராம் கஞ்சாவை கிளிநொச்சி விசேட குற்றத்தடுப்பு பொலிசார் மீட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி விமானப்படையினரால் கிளிநொச்சி விசேட குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இன்றய தினம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது,

யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி எடுத்து செல்லப்பட்ட குறித்த பொதி கிளிநொச்சி விசேட குற்றத்தடுப்பு பொலிசாரால் பரந்தன் பகுதியில் வைத்து மீட்கப்பட்டது.
பேருந்து ஒன்றில் சந்தேக நபர் ஒருவரால் எடுத்துச் செல்லப்பட்ட பயணப்பொதியிலிருந்து குறித்த கஞ்சா மீட்கப்பட்டதாகவும், குறித்த நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.