ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்

240 0

யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டதுடன், மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.