கடந்த 20ஆம் திகதி மாலை 06 மணி முதல் இன்று (06) காலை 06 மணிவரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊடரங்கு சட்டத்தை மீறிய 6850 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
1643 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 12 மணித்தியாலங்களில் பொலிஸ் ஊடரங்கு சட்டத்தை மீறிய 809 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 166 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.