யாழ். மற்றும் கொழும்புக்கு இடையில் மக்களுக்குத் தேவையான அத்தியவசியப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான பாஸ் நடைமுறையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட வணிகர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபருடன் நடைபெற்ற சந்திப்பினைத் தொடர்ந்து சம்மேளனத்தின் உபதலைவர் ஜயசேகரம் நேற்று (புதன்கிழமை) மாலை இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.