மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கலப்பு பகுதியில் விறகு சேகரிக்கச் சென்ற பெண்னொருவர் முதலை கடிக்கு உள்ளாகி பாரிய காயங்களுக்கு இலக்கான நிலையில் மரணமானார்.
குறித்த பெண் முதலை தாக்குதலுக்கு உள்ளாவதை கண்ட கடற்றொழிலாளர்கள் இருவர், பெண்ணை முதலையிடம் இருந்து மீட்டனர்.
எனினும் அந்த சமயம் குறித்த பெண் மரணித்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
27 வயதான குறித்த பெண் களுவாச்சிகுடி – பழுகாமம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

