ஊடரங்கு சட்டம் அமுலில் உள்ள போது மாணிக்ககல் அழ்ந்த 07 பேர் கைது

288 0
பொலிஸ் ஊரங்குசட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில் சட்ட விரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் அதிகார பிரதேச குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரினால் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே 21/03 அதிகாலை மேற்படி சந்தேக நபர்கள் கைதாகினர்.

ஹட்டன், செனன் தோட்டத்தில் தோட்ட குடியிருப்பொன்றுக்கு பின்னால் மிக சூட்சமமான முறையில் குழியொன்றை தோன்றி இல்ல மண்ணை எடுக்க முற்பட்ட போதே பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது

இதன் போது மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், இல்ல மண் என்பன பொலிஸாரினால் கைபற்றப்படுள்ளது.

கைது செய்யப்பட்ட ஏழு சந்தேக நபர்கள் அதே தோட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் வழக்கு பதிவு செய்து ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.