நாடு திரும்பியுள்ள 13 யாத்ரீகர்கள் அனுராதபுரம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்தியா தம்பதிவ யாத்திரை சென்றிருந்த நிலையில் குறித்த யாத்ரீகர்கள் நேற்று(வெள்ளிக்கிழமை) நாடு திரும்பியிருந்தனர்.
இந்தநிலையிலேயே குறித்த அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தொடர் கண்காணிப்பிற்கு பிறகு அவர்கள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.