கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் எனும் சந்தேகத்தில் மேலும் இருவர் அங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் பொலனறுவை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தில் அங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கந்தக்காடு கொரோனா தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவரும் சேமாவதிக்கு யாத்திரை சென்ற ஒருவருமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உலகை ஆக்கிரமித்துள்ள கொரோனா வைரஸ் தொற்று இலங்கையிலும் பரவியுள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட முதல் இலங்கையர் நேற்று அடையாளம் காணப்பட்டிருந்தார். குறித்த நபர் I.D.H மருத்துவமனையில் தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மேலும் அந்த நபர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியது.
சுற்றுலாத்துறை வழிகாட்டியாக பணியாற்றும் 50 வயதான அவர், இத்தாலியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலருடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சேர்ந்து பயணித்துள்ளார். இதன்போதே, அவர் தொற்றிற்கு இலக்காகியிருக்கலாமென நம்பப்படுகிறது.

