ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்,ஒரு பெண் உட்பட இரண்டு பேர் பிணையில் விடுதலை!

278 0

ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஏனைய 59 பேரின் விளக்கமறியல் அடுத்த மாதம் 24 திகதி வரை நீடித்து மட்டு.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டார்.

கடந்த வருடம் ஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 64 கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் ஆஜயர்படுத்தப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் நீடிக்கப்பட்டுவந்தது.

இந்த நிலையில் 5 பேரை பிணையில் விடுவிக்கப்பட்டநிலையில் தொடர்ந்து 59 பேரை எதிர்வரும் 24 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் இவர்கள் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.